விஜய் தனது கட்சியின் ஐந்து கொள்கை அடையாளங்களில் ஒருவராக பெரியாரை முன்னிறுத்தியுள்ளார். எனவே, இந்த அரசியல் தந்திரம் மிகவும் தெளிவானது. இதன் நோக்கம் தி.மு.க-வை அதன் கொள்கை ரீதியான களத்திலிருந்து ஓரங்கட்டுவதுதான்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் அமைந்த தமிழக வெற்றிக் கழக அரசு, அடுத்தடுத்து, இந்து ஆர்வலர்களால் தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இரண்டு தீர்ப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. முதல் தீர்ப்பு, புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் உள்ள ஒரு கல் தூணில் இந்துக்கள் விளக்கேற்ற அனுமதித்தது. இரண்டாவது தீர்ப்பு, “பக்ரீத் பண்டிகையின் போதோ அல்லது வேறு எந்த நாளிலும் பசுக்களோ அல்லது கன்றுகளோ வதைக்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிடுகிறது.
மாநில அரசு ஒரு சட்டப் போராட்டத்தை இந்த அளவுக்கு தீவிரமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யும் போது, அங்கு ஆபத்தில் இருப்பது வெறும் சட்டக் குறைபாடுகள் மட்டுமல்ல; மாறாக, அது பொது நலன் சார்ந்த விஷயம் என்று அரசு கருதுகிறது என்றுதான் அர்த்தம். மே 27 தேதியிட்ட தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமாக பக்ரீத் பண்டிகையின் போது அங்கீகரிக்கப்படாத இடங்களில் பசுக்கள் வதைக்கப்படுவது குறித்தே கவனம் செலுத்தியது.
தமிழ்நாட்டில் பசு வதைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட, 1976-ஆம் ஆண்டின் அரசாணை ஒன்றை (ஆச்சரியப்படும் விதமாக இது மேனகா காந்தியின் புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது) நீதிமன்றம் ஆதாரமாகக் கொண்டது. அருகில் உள்ள தர்காவில் வழிபடும் முஸ்லிம்கள் விளக்கு ஏற்றும் வழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த முதல் வழக்கைப் போலன்றி, இந்த பசு வதை தீர்ப்பால் பக்ரீத் கொண்டாடும் முஸ்லிம்களோ அல்லது விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் பிரதிநிதிகளோ குறிப்பாக கவலை அடைந்ததாகத் தெரியவில்லை.
