Latest

செந்தில் பாலாஜி கைதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: ஊழலுக்கு எதிராக விஜய்யின் முன்னெடுப்புக்கு சட்ட ரீதியான முதல் சோதனையா?
செந்தில் பாலாஜி கைதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: ஊழலுக்கு எதிராக விஜய்யின் முன்னெடுப்புக்கு சட்ட ரீதியான முதல் சோதனையா?
பள்ளிகள், கோவில்கள் அருகே இன்னமும் 129 டாஸ்மாக் கடைகள்: பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை.
பள்ளிகள், கோவில்கள் அருகே இன்னமும் 129 டாஸ்மாக் கடைகள்: பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை.
ஆக.6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்: வரைவு ஆவணங்களுடன் திருப்பதியில் அமைச்சர் வினோத் சாமி தரிசனம்.
ஆக.6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்: வரைவு ஆவணங்களுடன் திருப்பதியில் அமைச்சர் வினோத் சாமி தரிசனம்.
இங்க கடலை மிட்டாயை விட பெட்ரோல் விலை கம்மி… 2-வது இடத்தில் வெனிசுலா; முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?
இங்க கடலை மிட்டாயை விட பெட்ரோல் விலை கம்மி… 2-வது இடத்தில் வெனிசுலா; முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?

Posts List

சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.
சென்னை அருகே 3,000 ஏக்கரில் அமைகிறது ஏ.ஐ சிட்டி: தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்.
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.
காசோலை மோசடி: திருச்சி போக்குவரத்து தலைமை காவலருக்கு சிறை.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்: பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பரபரப்பு.
திருச்சியில் பள்ளி சிறுவன் ஓட்டிய கார் விபத்து; ஒருவர் படுகாயம், காரில் பயணித்த சிறுவர்கள் தப்பி ஓட்டம்.
திருச்சியில் பள்ளி சிறுவன் ஓட்டிய கார் விபத்து; ஒருவர் படுகாயம், காரில் பயணித்த சிறுவர்கள் தப்பி ஓட்டம்.
ஆடம்பரம் இல்லாமல் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்; போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததாக கோவை மக்கள் மகிழ்ச்சி.
ஆடம்பரம் இல்லாமல் திறக்கப்பட்ட உயர்மட்ட பாலம்; போக்குவரத்து நெரிசல் தீர்ந்ததாக கோவை மக்கள் மகிழ்ச்சி.
2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.
2-வது விமான நிலையம், பரந்தூரை மாற்றுமாறு தமிழக அரசு கோரவில்லை: மத்திய அரசு தகவல்.
திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
திருச்சியில் ஒரே நாளில் நடந்த 2 விபத்துக்கள்… கல்லூரி மாணவர் – குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!
கோவையில் போலி தங்கக் கட்டிகளைக் கொடுத்து நகைகளைப் பறித்த ஆந்திர தம்பதி கைது: உண்மையான தங்கம் போல ஒட்டி ஏமாற்று வித்தை!!
விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.
விஜய் புகைப்படத்துடன் ஸ்டாலின், இ.பி.எஸ் படங்கள்: கோவை மாமன்ற அரங்கில் புதிய மாற்றம்.
காலி குடங்களுடன் அ.தி.மு.க, ஊழல் புகாரில் காங், கழிவுநீர் மைய எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்: கோவை மாமன்றத்தில் கைகலப்பு.
காலி குடங்களுடன் அ.தி.மு.க, ஊழல் புகாரில் காங், கழிவுநீர் மைய எதிர்ப்பில் கம்யூனிஸ்ட்: கோவை மாமன்றத்தில் கைகலப்பு.

Posts Slider

Tech

18,000 காலிப்பணியிடங்கள்: முதல்கட்டமாக 2,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்; டி.ஆர்.பி அதிரடி திட்டம்.
18,000 காலிப்பணியிடங்கள்: முதல்கட்டமாக 2,000 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்; டி.ஆர்.பி அதிரடி திட்டம்.

ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் விரை​வில் 2,000 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் ஆசிரியர் பயிற்​றுநர்​களை நியமிக்க பள்​ளிக்​கல்​வித்​துறை முடிவுசெய்​துள்​ளது. இதுதொடர்​பான அறி​விப்பு இம்மாதம் வெளி​யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,000 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை விரைவில் நியமிக்கப் பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆகஸ்ட் மாத மத்தியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதற்கான போட்டித்தேர்வுகள் வரும் நவம்பர் மாதம் நடத்தப்பட உள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வின் தாள்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள், இந்த பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர்.

பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் தேர்வைப் பொறுத்தவரையில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தேர்வில் 30 வினாக்கள் இடம்பெறும். கட்டாயத் தமிழ் மொழித் தாளில் தேர்வர்கள் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். தமிழ் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி மெரிட் பட்டியலுக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்றாலும், இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தேர்வரின் முதன்மைப் பாடத் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலமாகவே நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வட்டார கல்வி அலுவலர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர், அரசு கல்லூரி உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களும் டி.ஆர்.பி வாயிலாகவே நிரப்பப்படுகின்றன.

தற்போது அரசுப் பள்ளிகளில் 18,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்தல் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடைசியாக, கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடத்தப்பட்டு, அதன் மூலம் 2,582 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் வரமாக அமைந்த இந்த ஆப்ஷன்; சாய்ஸ் பில்லிங் செய்யும் முன் இதை கவனிங்க.
இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் வரமாக அமைந்த இந்த ஆப்ஷன்; சாய்ஸ் பில்லிங் செய்யும் முன் இதை கவனிங்க.
தேசிய அளவில் 12-வது இடம், தமிழகத்தில் முதலிடம்: நீட் தேர்வில் விழுப்புரம் மருத்துவரின் மகன் அசுர சாதனை
தேசிய அளவில் 12-வது இடம், தமிழகத்தில் முதலிடம்: நீட் தேர்வில் விழுப்புரம் மருத்துவரின் மகன் அசுர சாதனை
அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க!!
அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; விண்ணப்பிக்க மறக்காதீங்க!!

Economy

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்

Bloomberg’s Top 10 Richest Person List in the World in 2026: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளதால், அதிக நஷ்டத்தைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் அவரும் ஒருவராக உள்ளார்.

World’s Bloomberg Billionaires List 2026: ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் சமீபத்திய அறிவிப்பின்படி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான தரவரிசையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான அதானி, 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளாவிய பட்டியலில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான அம்பானி, 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தில் நெருக்கமாகப் பின்தொடர்கிறார்.

ஆங்கிலத்தில் படிக்க:

அதானியின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வு, அவரை அம்பானியை முந்தச் செய்து, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற மகுடத்தை மீண்டும் பெற்றுத் தந்துள்ளது. பிராந்திய தரவரிசையில் அவர்களுக்குப் பின்னால் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் சீனத் தொழில்முனைவோரான ஜாங் யிமிங் (Zhang Yiming) 68.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். அவரைத் தொடர்ந்து நோங்ஃபு ஸ்பிரிங் (Nongfu Spring) நிறுவனர் ஜாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 68.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

உலக அளவில், எலோன் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்; அவரது சொத்து மதிப்பு 656 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக லாரி பேஜ் (286 பில்லியன் டாலர்) மற்றும் ஜெஃப் பெசோஸ் (269 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் லாரி எலிசன் போன்றவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர், இது உலகின் பெரும் செல்வந்தர்களிடையே தொழில்நுட்பத் துறைத் தலைவர்களின் வலுவான இருப்பை உணர்த்துகிறது.

2025 மற்றும் 2026-க்கு இடைப்பட்ட சொத்து வளர்ச்சி விகிதத்தில், அதிக லாபம் ஈட்டியவர்களில் அதானி 19-வது இடத்தில் உள்ளார் (ஓராண்டில் 8.10 பில்லியன் டாலர் உயர்வு). இதற்கு நேர்மாறாக, அம்பானி சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் ஒருவராக உள்ளார். ப்ளூம்பெர்க்கின் 2026 குறியீட்டின்படி, அதே காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

உலகளாவிய மாற்றங்களைக் கவனித்தால், எலோன் மஸ்க் தனது சொத்தில் 36.7 பில்லியன் டாலர்களைச் சேர்த்து அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், தற்போது உலகின் ஒன்பதாவது பணக்காரராக இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட், தனது சொத்து மதிப்பில் 44 பில்லியன் டாலர்களை இழந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: உலகின் முதல் 10 பணக்காரர்கள்

வரிசை எண்    பெயர்    மொத்த சொத்து மதிப்பு (USD)    நாடு    தொழில் துறை

1.    எலோன் மஸ்க்    656 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
2.    லாரி பேஜ்    286 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
3.    ஜெஃப் பெசோஸ்    269 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
4.    செர்ஜி பிரின்    266 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
5.    மார்க் ஜுக்கர்பெர்க்    239 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
6.    லாரி எலிசன்    230 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
7.    மைக்கேல் டெல்    170 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
8.    ஜென்சன் ஹுவாங்    164 பில்லியன்    அமெரிக்கா    தொழில்நுட்பம்
9.    பெர்னார்ட் அர்னால்ட்    164 பில்லியன்    பிரான்ஸ்    நுகர்வோர் பொருட்கள்
10.    ஜிம் வால்டன்    150 பில்லியன்    அமெரிக்கா    சில்லறை வர்த்தகம்

குறிப்பு: ஏப்ரல் 17, 2026 நிலவரப்படி ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் தரவு இதுவாகும். இது உலகின் பணக்காரர்களின் தினசரி தரவரிசையாகும், மேலும் நியூயார்க்கின் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் சொத்து மதிப்புத் தரவு புதுப்பிக்கப்படும்.

வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!
வரலாறு காணாத தங்கம் விலை; முதல்முறையாக ஒரு சவரன் ரூ.75,200!
Everything You Wanted to Know About mega city’s
Everything You Wanted to Know About mega city’s
Metro city’s should make road with protection In mind
Metro city’s should make road with protection In mind

Latest News

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? முடியாதா? விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி.

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட முடியுமா? முடியாதா? என முதலமைச்சர் விஜய்க்கு…

செந்தில் பாலாஜி கைதுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: ஊழலுக்கு எதிராக விஜய்யின் முன்னெடுப்புக்கு சட்ட ரீதியான முதல் சோதனையா?

விஜய் அரசு சொல்லும் செய்தி தெளிவாக உள்ளது. அதாவது, முந்தைய ஆட்சியின் கீழ் குவிந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளைத் தாங்கள் பின்தொடர்வதாகக் காட்டிக்கொள்ளவே புதிய அரசு விரும்புகிறது. டாஸ்மாக் ஊழல் வழக்கில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்குத் தடை…

பள்ளிகள், கோவில்கள் அருகே இன்னமும் 129 டாஸ்மாக் கடைகள்: பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களின் 500 மீட்டர் சுற்றளவுக்குள் விதிமுறைகளை மீறி சுமார் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதாக தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள்…

ஆக.6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல்: வரைவு ஆவணங்களுடன் திருப்பதியில் அமைச்சர் வினோத் சாமி தரிசனம்.

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், திருப்பதியில் அமைச்சர் வினோத் இன்று பூஜை செய்து வழிபட்டுள்ளார். தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட உள்ளது.…

இங்க கடலை மிட்டாயை விட பெட்ரோல் விலை கம்மி… 2-வது இடத்தில் வெனிசுலா; முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?

இந்தியாவில் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் சில நாடுகளில் கடலை மிட்டாய் விலையை விட பெட்ரோல் விலை கம்மியாக கிடைக்கிறது. அது எந்த நாடு என்பது குறித்து பார்க்கலாம். இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி வண்டி…