Posts List
Posts Slider
Tech
புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் சரிவு; சமச்சீர் கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி அரசு பள்ளிகளில் கல்வித் தரம் தொடர்ந்து சரிவடைந்து வருவதாகவும், சி.பி.எஸ்.இ. (CBSE) பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட விதம் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து சமச்சீர் கல்வி பிரிவையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி கல்வி ஆர்வலரும் பத்திரிகையாளருமான ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி நடைமுறையில் இருந்த காலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பாக தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், அரசியல் காரணங்களால் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது கல்வி வல்லுநர்களின் கருத்து கேட்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சாதனைகளை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டு வரப்பட்ட சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்றும், மாறாக அவர்களின் தன்னம்பிக்கையை பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்பு பொதுத்தேர்வுகளில் 400, 450 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்கள், சி.பி.எஸ்.இ. முறையில் 150 மதிப்பெண்களைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும், உண்மையை மறைத்து கல்வியில் சாதனை நிகழ்ந்ததாக கூறப்பட்டதாகவும், தங்களது தவறுகளை மறைக்க மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெறச் செய்ததாகவும் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளின் உண்மையான தேர்ச்சி சதவீதம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் நிலை உருவாகியுள்ளதால், பலர் உயர்கல்வியை தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தெரியாத அதிகாரிகள் கல்வித்துறை செயலர்களாக இருந்ததாலும், அரசியல் அழுத்தங்களுக்கு இணங்கிய அதிகாரிகள் கல்வி நிர்வாகத்தில் இருந்ததாலும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் பாதிப்புகள் குறித்து அரசு சரியான தகவலை பெறவில்லை என்றும், தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதால் கல்வித் தரம் பாதிக்கப்பட்டதாகவும் ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையை தனியார் பள்ளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சமச்சீர் கல்வி பிரிவுகளை தொடங்கி மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், கல்வித் தரச் சிக்கல்களால் பலர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை தொடர்ந்தால் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அதனைத் தவிர்க்க அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துடன் சமச்சீர் கல்வி பிரிவையும் இணைத்து நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடத்திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கி, சோதனை முயற்சியாக இதை செயல்படுத்தலாம் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், புதுச்சேரியின் கல்வி நிலை குறித்து முதலமைச்சர், கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலர், கல்வித்துறை அதிகாரிகள், கல்வி வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆலோசித்து நீடித்த தீர்வை எடுக்க வேண்டும் என்றும், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசு பள்ளிகள் மாணவர் சேர்க்கை இன்றி மூடப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அரசு கல்விக்காக எவ்வளவு நிதி ஒதுக்கினாலும், இலவச திட்டங்கள் எவ்வளவு வழங்கப்பட்டாலும், கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் இல்லையெனில் அவை பயனற்றதாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட முதலமைச்சர், அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் இந்த பிரச்சினையிலும் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், முதலமைச்சர், துணைநிலை ஆளுநர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமலிங்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
Economy
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானி; உலகின் டாப் 10 பணக்காரர்கள்
Bloomberg’s Top 10 Richest Person List in the World in 2026: முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளதால், அதிக நஷ்டத்தைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் அவரும் ஒருவராக உள்ளார்.

World’s Bloomberg Billionaires List 2026: ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் சமீபத்திய அறிவிப்பின்படி, முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கௌதம் அதானி உருவெடுத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான தரவரிசையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான அதானி, 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகளாவிய பட்டியலில் 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான அம்பானி, 90.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 20-வது இடத்தில் நெருக்கமாகப் பின்தொடர்கிறார்.
அதானியின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வு, அவரை அம்பானியை முந்தச் செய்து, ஆசியாவின் பெரும் பணக்காரர் என்ற மகுடத்தை மீண்டும் பெற்றுத் தந்துள்ளது. பிராந்திய தரவரிசையில் அவர்களுக்குப் பின்னால் பைட் டான்ஸ் (ByteDance) நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ மற்றும் சீனத் தொழில்முனைவோரான ஜாங் யிமிங் (Zhang Yiming) 68.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். அவரைத் தொடர்ந்து நோங்ஃபு ஸ்பிரிங் (Nongfu Spring) நிறுவனர் ஜாங் ஷான்ஷான் (Zhong Shanshan) 68.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.
உலக அளவில், எலோன் மஸ்க் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்; அவரது சொத்து மதிப்பு 656 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக லாரி பேஜ் (286 பில்லியன் டாலர்) மற்றும் ஜெஃப் பெசோஸ் (269 பில்லியன் டாலர்) ஆகியோர் உள்ளனர்.
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் லாரி எலிசன் போன்றவர்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர், இது உலகின் பெரும் செல்வந்தர்களிடையே தொழில்நுட்பத் துறைத் தலைவர்களின் வலுவான இருப்பை உணர்த்துகிறது.
2025 மற்றும் 2026-க்கு இடைப்பட்ட சொத்து வளர்ச்சி விகிதத்தில், அதிக லாபம் ஈட்டியவர்களில் அதானி 19-வது இடத்தில் உள்ளார் (ஓராண்டில் 8.10 பில்லியன் டாலர் உயர்வு). இதற்கு நேர்மாறாக, அம்பானி சொத்து மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்த முதல் ஐந்து நபர்களில் ஒருவராக உள்ளார். ப்ளூம்பெர்க்கின் 2026 குறியீட்டின்படி, அதே காலகட்டத்தில் அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.
உலகளாவிய மாற்றங்களைக் கவனித்தால், எலோன் மஸ்க் தனது சொத்தில் 36.7 பில்லியன் டாலர்களைச் சேர்த்து அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், தற்போது உலகின் ஒன்பதாவது பணக்காரராக இருக்கும் பெர்னார்ட் அர்னால்ட், தனது சொத்து மதிப்பில் 44 பில்லியன் டாலர்களை இழந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் தரவரிசை: உலகின் முதல் 10 பணக்காரர்கள்
வரிசை எண் பெயர் மொத்த சொத்து மதிப்பு (USD) நாடு தொழில் துறை
1. எலோன் மஸ்க் 656 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
2. லாரி பேஜ் 286 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
3. ஜெஃப் பெசோஸ் 269 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
4. செர்ஜி பிரின் 266 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
5. மார்க் ஜுக்கர்பெர்க் 239 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
6. லாரி எலிசன் 230 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
7. மைக்கேல் டெல் 170 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
8. ஜென்சன் ஹுவாங் 164 பில்லியன் அமெரிக்கா தொழில்நுட்பம்
9. பெர்னார்ட் அர்னால்ட் 164 பில்லியன் பிரான்ஸ் நுகர்வோர் பொருட்கள்
10. ஜிம் வால்டன் 150 பில்லியன் அமெரிக்கா சில்லறை வர்த்தகம்
குறிப்பு: ஏப்ரல் 17, 2026 நிலவரப்படி ப்ளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் குறியீட்டின் தரவு இதுவாகும். இது உலகின் பணக்காரர்களின் தினசரி தரவரிசையாகும், மேலும் நியூயார்க்கின் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் சொத்து மதிப்புத் தரவு புதுப்பிக்கப்படும்.
Posts Carousel
Latest News
நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ராகுல் காந்தியுடன் கிரண் ரிஜிஜு சந்திப்பு; கோரிக்கைகளில் காங்கிரஸ் உறுதி.
அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தச் சந்திப்பை ஒரு “மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று விவரித்த நிலையில், கிரண் ரிஜிஜு “பிரதமரின் நிகழ்ச்சி நிரலுடன்” வந்ததாக காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் கூறினார். நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் நிலவும் நாடாளுமன்ற முடக்கத்தை உடைக்கும் முயற்சியாக,…
புதுச்சேரி அம்பேத்கர் சாலை போக்குவரத்து நெரிசல்: தீர்வு காண எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் ஆலோசனை.
புதுச்சேரி அம்பேத்கர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் சூழலில், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…
ஹேப்பியோ ஹேப்பி… இந்த நாட்டுக்கு போனா நீங்க சிறகடிச்சு பறக்கலாம்; லிஸ்டில் சிங்கப்பூரே 2-வது இடம் தான்.
எந்த நாட்டில் நீங்கள் குடியேறினாள் வேலை – வாழ்க்கை சமநிலையாக இருக்கும் என்றும் உங்கள் வீட்டு செலவு குறைவாக இருக்கும் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம். சிறந்த வானிலை, முறையான வேலை – வாழ்க்கை சமநிலை (Work-life…
இந்தாண்டு ரூ.1.22 லட்சம் கோடி கடன் வாங்க இலக்கு: 50 வருஷத்துக்கு கடனை குறைக்க முடியாது; தமிழக நிதித்துறை செயலாளர்.
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை (2026-2027) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசின் முதலாவது…
காவிரி விவகாரத்தில் வறட்டு கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் – திருமாவளவன்.
பெண்களுக்கு எதிராக பேசியதால் வலுவான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை தொடர் விவாதத்திற்கு உட்படுத்த தேவையில்லை. அது நேற்றோடு முடிந்துவிட்டது; திருச்சியில் திருமாவளவன் பேட்டி. அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து திருச்சி…
