தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நஅதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்து நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், நடிப்பு மட்டும் இல்லாமல், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் அஜித், நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் ஒன்று பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் போனது. ஆனால் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி அங்கேயும் வெற்றியை பெற்றிருந்துது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். நஅதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்து நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித், நடிப்பு மட்டும் இல்லாமல், விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று அசத்தி வருகிறார். அவரது சினிமா கேரியரில் மிக முக்கிய திரைப்படங்களை பட்டியல் எடுத்தால் எடுத்தால் அதில் வரலாறு திரைப்படத்திற்கு முக்கிய இடம் இருக்கும். அஜித் முதல் முறையாக இந்த படத்தில் 3 வேடங்களில் நடித்திருந்தார். 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்தின் திரை வாழ்க்கையை மாற்றியது. கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித், அப்பா, மகன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருப்பார். இவருடன் இணைந்து அசின், கனிகா, மன்சூர் அலிகான், ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் அஜித் பரத நாட்டிய கலைஞராக நடித்து அசத்தியிருப்பார். அதிலும், அவர் ஆடும் பரத நாட்டியம் டான்ஸ் எல்லாம் அஜித் இப்படியெல்லாம் ஆடுவாரா என்று மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உபேந்திரா, கன்னடத்தில் வரலாறு ரீமேக்கில் நடித்திருப்பார். அங்கு ’காட்ஃபாதர்’ என்ற பெயரில் இந்த படம் உருவாகியது. கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையில் சேது ஸ்ரீராம் இயக்கத்தில் இந்த படம் உருவாகியிருக்கும். அஜித் அளவிற்கு இல்லாவிட்டாலும் ஓரளவு உபேந்திரா இந்த படத்தில் நடித்திருப்பார். கன்னட ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  4.5 கோடி ரூபாயில் 7 கோடி வரை கன்னடத்தில் வசூலித்தது. 

தமிழில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம், ரிலீஸ் ஆவதில் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. 8 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போனது. கடைசியாக ஒரு தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்தபோதும் ஒன்றும் நடக்கவில்லை. அப்போது அஜித்திடம் கேட்டபோது என்னிடம் பணம் இல்லை, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கூறியுள்ளார்.