வெற்றி பெற்ற த.வெ.க வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் பெரிய பிளான் போட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 233 தொகுதிகளில் விஜய்யின் த.வெ.க தனித்துப் போட்டியிட்டது. எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், த.வெ.க 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியை பிடிக்கும் நோக்கில் த.வெ.க சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே, சில தொகுதிகளில் வெற்றி பெறும் த.வெ.க வேட்பாளர்களை குதிரை பேரத்தின் அடிப்படையில் இழுக்க தி.மு.க, அ.தி.மு.க முயற்சி செய்யலாம் என விஜய்க்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு கட்சியின் வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், ‘வெற்றி பெற்றதும் வேறு எங்கும் செல்லாமல் எந்நேரமாக இருந்தாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும். உங்களுக்காக நான் காத்திருப்பேன்’ என அறிவுறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.
