வேளச்சேரி​யில் நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் முதல் சுற்​றில், உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​ய ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது.

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரி​யில் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்​கி நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான முதல் சுற்​றில் உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​னார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்​கும் தலா 0.5 புள்​ளி​ வழங்​கப்பட்​டது.

இந்த ஆட்டத்தில், வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய உலக சாம்பியனான குகேஷ், ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒரு சிறிய சாதகமான நிலையைப் பெற்றிருந்தார். ஆனால் 13 நகர்வுகளுக்குப் பிறகு ஆட்டம் சமநிலையை எட்டியது; இருப்பினும், குகேஷின் ராணி ‘h6’ கட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டு, ‘g8’ கட்டத்தில் இருந்த நிஹாலின் ராஜாவை குறிவைத்துக் கொண்டிருந்தது.

தனது 17-வது நகர்த்தலுக்கு 20 நிமிடங்களைச் செலவிட்டதால், குகேஷ் நேர அடிப்படையில் 40 நிமிடங்கள் பின்தங்கினார். 19-வது நிஹால் சரினின் கைவசம் ஒரு மணி நேரத்திற்கும் மேலான நேரம் இருந்தது. இதனால், நேர நெருக்கடியால் குகேஷ் சிக்கலில் மாட்டிக்கொண்டு, ஆட்டக்களத்தில் ஏதேனும் தவறு (blunder) செய்யும் அபாயம் உருவானது. ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை; இறுதியில் இந்திய வீரர்களான இருவரும் 47 நகர்த்தல்களுக்குப் பிறகு ஆட்டத்தை சமநிலையில் (draw) முடித்தனர். அதனால், இருவருக்கும் 0.5 புள்​ளி​ வழங்​கப்பட்​டது.