கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் உள்புல பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோவை மாநகராட்சி ஆணையரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களும் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்களும் கலந்து கொண்டு மறியல் செய்தனர் இதனை தொடர்ந்து காவல்துறை மறியலில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை கைது செய்தனர்

தமிழகத்தை ஆளும் திமுக விளம்பர அரசு கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம் ஊதிய உயர்வு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதை கண்டித்து .
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 9 மணி அளவில் இருந்து 11 மணி வரை காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
இதனை தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் நிறைவேற்ற கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் திமுக தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர் இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது கோவை ரயில் நிலைய சாலை மற்றும் நகர் பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை கொண்டு சென்ற வாகனங்களை மாட்டிக்கொண்டு பெரும் இன்னலுக்கு உள்ளானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *