முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சி. கணேசனுக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் நிலம் வழங்கப்பட்டதில் தொடரப்பட்ட 14 ஆண்டுகால ஊழல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய சி. கணேசன் என்பவருக்கு அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ், “நேர்மையான அரசு ஊழியர்” பிரிவில் 10 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையை, வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது ரத்து செய்துள்ளது. இந்த வழக்கின் ஒட்டுமொத்த நன்நடவடிக்கைகளும் சட்ட நடைமுறைகளை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதே தவிர வேறொன்றுமில்லை என்றும், இதனைத் தொடர்ந்து நீட்டிக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கைகள் தள்ளுபடி செய்யத்தக்கவை என்றும் நீதிபதி  ஜி. கே. இளந்திரையன் தெரிவித்துள்ளார்.