மலைகளின் அரசி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளது சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா மற்றும் கண்காட்சி நடத்தப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து ஊட்டியில் நாளை சனிக்கிழமை 9 தேதி துவங்கி 12 தேதி திங்கட்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது கண்காட்சி பல வண்ண ரோஜா பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு தோட்டக்கலைத்துறை சிறப்பாக செய்து வருகிறது
அதன்படி ஆயிரக்கணக்கான ரோஜா மலர்களை கொண்டு பிரம்மாண்டமான டால்பின். மீன். சிப்பி. நத்தை. ஆமை. பென்குயின் போன்ற பல்வேறு உயிரினங்கள் ரோஜா மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது ரோஜா பூங்காவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் வைக்கப்பட்டுள்ள ரோஜா செடிகள் ஏராளமான மலர்கள் பூத்து காணப்படுகிறது இந்த ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல கள்ளி செடி பரணி செடிகள் வைக்கப்பட்டுள்ளன கண்ணாடி மாளிகை பல்லாயிரக்கணக்கான கள்ளிச்செடிகள் வைக்கப்பட்டுள்ளன கண்ணாடி மாளிகை மேல் கார்டன் பகுதியில் உள்ள இலை இரண்டுமே வலுவிழந்து காணப்பட்டது இதனை தொடர்ந்து சீரமைத்து தற்போது புது பொலிவுடன் மாளிகையை வைக்கப்பட்டுள்ளது கள்ளி செடிகள் மற்றும் பரணி செடிகள் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கின்றனர் பூங்கா நுழைவாயில் உள்ள கருணை இல்லம் கண்ணாடி மாளிகை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்த புதிய பொலிவுடன் காணப்படுகிறது ரோஜா கண்காட்சி நடைபெற மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *